கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் மாபெரும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது, அதை தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து வன்னியர்கள் மாமல்லபுரம் நோக்கி விரைந்தனர், அதில் ஒரு குழுமம் மரக்காணம் பகுதியை கடக்கும் பொழுது அங்கிருந்த சமூதாயத்தினருடன் மோதல் ஏற்பட்டு ஒரு காவலர் உட்பட இருவர் இறந்தனர்.
மேலும் மாமல்லபுரத்தில் பல புராதான சின்னங்கள் சிதைக்கபட்டன. அதை தொடர்ந்து தமிழக காவல்துறை டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்தவர்களை கைது செய்தது. சிறிது நாட்களில் டாக்டர் ராமதாஸ் பிணையில் விடுவிக்கபட்டார், குருவையும் விடுவிக்க கோரி பா.ம.கவினர் ஆர்பாட்டம் செய்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க உத்திரவிட்டார்.
இதை எதிர்த்து குரு தரப்பு மேல்முறையீடு செய்தது, ஜூன் ஒன்றாம் தேதி குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டம் தேவையில்லை, அவரை விடுவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகர் அறிவித்தது. ஆனால் மீண்டும் ஜூலை மூன்றாம் தேதி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கும்படி கலைக்டர் உத்தரவிட்டார். இரண்டாவது முறையாகவும் குரு தரப்பு மேல்முறையீடு செய்தது.
நேற்று மத்திய உள்துறை அமைச்சகம், இவ்வழக்கிற்கு தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவேண்டிய அவசியமில்லை, வேறு வழக்கிற்கு தேவைப்படவில்லை எனில் அவரை உடனே விடுதலை செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை விடுத்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.