BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 19 August 2013

ஜி எஸ் எல் வி கவுண்ட் டவுன் நிறுத்தம்.

இந்தியாவிலிருந்து இன்று 4.50 மணிக்கு செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட்டின் கவுன் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.

இதுவரை கிரியோஜெனிக் தொழில்நுட்ப இஞ்சின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் அனைத்தும் எதோ ஒரு வகையில் ரஷ்ய உதிரிபாகங்களை உள்ளடங்கி இருக்கும், ஆனா இந்த ட்5 ராக்கெட் முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கபட்டது ஆகும்.

இதற்கு முன் செலுத்தபட்ட ஏழு கிரியோஜெனிக் இஞ்சின் தொழில்நுட்ப ராக்கெட்களில் இரண்டில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது, தொலைதொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக அனுப்ப இருந்த இந்த ராக்கெட்டின் கவுண்டவுன் திடிரென நிறுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்த ஒரு மணி பதினாறு நிமிடங்கள் இருந்த நிலையில், கடைசி கட்ட சோதனையின் போது இஞ்சினில் இருந்து புகை வெளிவருவதை கண்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை மணி அடித்ததின் பெயரில் கவுண்ட்டவுன் நிறுத்தபட்டதாக தெரிகிறது. இதன் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யபட்டு விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தரப்பு தெரிவித்துள்ளது.


1 comment :

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media