BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 16 August 2013

கோர்டுக்கு போகும் தலைவா!

தலைவா படம் வெளியிடுவதில் தொடர்ந்து இருந்து வரும் தடைகளை நீக்க கோரி தமிழக அரசிடம் பேச தலைவா பட தரப்பு பல முறை முயற்சித்தும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே ஒட்டமொத்த படக்குழுவினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்த சென்னை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

நாங்கள் உங்கள் பேச்சை மட்டுமே கேட்போம், கடைசி வாய்ப்பளியுங்கள் என்பதை சுட்டிக்காட்டும் வரியாக, தமிழக அரசு எங்கே இடம் ஒதுக்குகிறதோ அங்கேயே உண்ணாவிரதம் இருக்க தயார் என தலைவா படக்குழு அந்த மனுவில் எழுதியிருந்தது. ஆகினும் ஆணையர் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார்.

வெடிகுண்டு மிரட்டிலினால் தியேட்டர் அதிபர்களே படத்தை வெளியிட தயங்குகின்றனர், முதலில் அவர்களிடம் பேசுங்கள் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் சொல்லி அனுப்பி விட்டதாக தெரிகிறது, மீறி பேசினால் தமிழகத்தில் மொத்தம் எத்தனை தியேட்டர், எத்தனை போலிஸ் என புள்ளிவிபரம் சொல்ல ஆரம்பித்து விடுவார் என தயாரிப்பு தரப்பு திரும்பிவிட்டது.

வேந்தர் மூவிஸ் ஒருபக்கம் பா.ஜ.கவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது குருடனிடம் வழி கேட்பது போல் தான் என்றாலும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது தான் இப்போதைய தலைவா படக்குழுவினரின் நிலை. நடிகர் விஜயின் தந்தையோ இது முழுக்க முழுக்க தமிழுக அரசின் சதிச்செயல் தான், வேண்டுமென்றே பழிவாங்குகிறார்கள் என சொல்லி வருகிறாராம்.

காலில் விழாத குறையாக கெஞ்சி பார்த்தும் வேலைக்காக விரக்தியில் நடிகர் விஜய் சட்ட நியுணர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார், இன்னும் தலைவா படம் வெளியாவது தடை பட்டால் தமிழக அரசின் மீது வழக்கு தொடரும் முடிவில் இருப்பதாக தெரிகிறது, மேலும் விஜய் ரசிகர்களுக்கு ஆங்காங்கே பஸ் மறியல், போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை கவருமாறு செய்தி சென்றுருக்கிறது.

# இன்று இரவு கலைஞர் தொலைகாட்சியில் விஜய் நடித்த வில்லு படம், (புள்ளபிடிக்கிற கோஷ்டி கிளம்பிருச்சு போலயே)




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media