BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 16 August 2013

உயரும் செல்போன் கட்டணம்.

சென்ற திமுக ஆட்சியின் போது ஏக முறையில்லாமல் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற வகையில் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து எதிர்கட்சிகள் செய்த ஆர்பாட்டத்தின் காரணமாக மத்திய தணிக்கை துறை ஆராய்ந்து ஏலம் விடப்படாததால் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நட்டம் என அறிக்கை வெளியிட்டது.

தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வந்தாலும் இது குறித்து நடந்த சில பண பரிவர்த்தனைகள் ஆதாரமாக வைத்து திமுக எம்பிக்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம், மேலும் சில செல்போன் நிறுவங்களின் உரிமத்தை ரத்து செய்தது. ஏற்கனவே இருப்பவர்களிடன் கூடுதல் தொகையும் வசூலிக்கபட்டது.

சில நாட்களுக்கு முன்னர் பூஸ்டர் கார்டு எனப்படும் ரேட் கட்டர் கட்டணம் உயர்த்தபட்டாலும் மீண்டும் செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இது குறித்து நமது சிறப்பு செய்தியாளர் சில தொழில்நுட்ப வல்லுனர்களிடம் தொகுத்த கருத்துக்கள்.

இன்று ஸ்மார்ட்போன் கலாச்சாரம் உலகெங்கும் பரவிவிட்டது, இன்று பெரும்பான்மையான அழைப்புகள் செல்போனில் இருந்தாலும் அவை பெரும்பாலும் இண்டெர்நெட் அழைப்புகளே. viper, skype போன்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேசன்கள் இணையம் மூலமாக அதே அப்ளிகேசனை பயன்படுத்தும் நண்பர்களுடன் பேச வசதியாக இருக்கிறது.

3ஜி வசதியை தற்பொழுது பயன்படுத்தி வரும் நாம் மிக விரைவில் 4ஜி வசதியை பயன்படுத்த இருக்கிறோம். 4ஜி வசதியுடய செல்போன் மற்றும் இணைப்புடன் குறைந்தது 5,000 ரூபாயில் ஆரம்பித்து 50,000 வரை செல்போன்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன, இதுகுறித்து சாம்சங் மற்றும் ரிலையன்ஸ் பேச்சு வார்த்தை முடியும் கட்டத்தில் இருப்பதாகவும் இவ்வருட இறுதிக்குள் 4ஜி செல்போன் இந்தியாவில் வெகுவாக புழங்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறினர்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media