BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 16 August 2013

நாங்களும் வழக்கு போடுவோம், அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரமாட்டார் - அன்புமணி அதிரடி மிரட்டல்



வந்தவாசியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், எங்கள் மீது வழக்குப் போடும் அதிகாரிகளை நாங்கள் சும்மா விட மாட்டோம். நாங்கள் அவர்கள் மீது வழக்குப் போடுவோம். அப்போது அவர்களைக் காப்பாற்ற ஜெயலலிதா வர மாட்டார் என்று பேசியுள்ளார்.

தருமபுரி இளவரசன் தற்கொலைக்கு நீதி விசாரணை நடத்துகின்றனர். ஆனால் மரக்காணத்தில் வன்னியர் இருவர் இறந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் மீது வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நாங்கள் வழக்கு போடுவோம். அப்போது அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரப்போவதில்லை என்று அதிரடியாக பேசினார்.

மேலும் பேசிய அவர் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற இந்த இரு கோரிக்கைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பாமக தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

# சின்னடாக்டர், பார்த்து சூதானமா பேசுங்க, இப்போதான் புழலை பார்த்துவிட்டு வந்தீர்கள், இதுக்கும் ஏதும் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடப்போகிறார்கள்.

மேலும் பல செய்திகளை படிக்க http://www.satrumun.net/லிங்கை அழுத்துங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media