BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 August 2013

காதலனை கொல்ல முயல்கிறார் இயக்குனர் சேரன் என்று அவரது மகள் புகார்

எங்கள் காதலை மறுக்கிறார், காதலனை கொல்ல முயல்கிறார் இயக்குனர் சேரன் என்று அவரது மகள் புகார்.

இயக்குனர் சேரன் அவர்கள் காதலை புனிதப்படுத்தியும் சாதி மறுப்பு காதல் திருமணங்களை ஆதரித்தும் பல படங்களை எடுத்த ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள படங்கள் எடுப்பவர் மட்டுமல்ல, சமீபத்தில் தர்மபுரி கலவரத்தை மையமாக வைத்து எடுத்த கெளரவம் திரைப்படம் பற்றிய நீயா? நானா? நிகழ்ச்சியிலும் கடுமையாக சாதியை சாடியும் காதலை ஆதரித்தும் பேசியவர். ஆனால் அவரது இரண்டாவது மகள் காலையில் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் இயக்குனர் சேரன் அவரது மகளின் காதலரை கொலை செய்துவிடுவேன் என்று அடியாள்கள் வைத்து மிரட்டுவதாகவும் தனது காதலை பிரிக்க முயல்வதாகவும் புகார் அளித்தார்.

இயக்குனர் சேரன் சில வாரங்களுக்கு முன் கமிஷனர் அலுவலகம் சென்று கமிஷனரை சந்தித்து வந்தார், அப்போது கேட்டபோது சொந்த விசயமாக கமிஷனரிடம் பேச வந்தேன் என்றார், அப்போது தெரியவில்லை இவர் பேச வந்தது இந்த விசயமாகத்தான் என்று.

பாரதி கண்ணம்மாவை சாவில் சேர்த்து வைத்த இயக்குனர் சேரனோ தன் மகளின் காதலுக்கு மட்டும் சமாதி கட்ட முயல்கிறார், முற்போக்காக படம் எடுக்கலாம், முற்போக்காக டிவி ஷோக்களில் பேசலாம் ஆனால் தன் சொந்த மகள் வாழ்க்கை என்று எடுத்தால் பொறுந்தாத காதல், காதலனுக்கு வருமானம் இல்லை, காதலன் நல்லவன் இல்லை, சாதி வித்தியாசம் என்று எல்லாம் பேசுவார்கள் பொது விசயம் என்றால் முற்போக்கு என்று மூச்சை பிடித்துக்கொண்டு பேசுவார்கள், முற்போக்கு என்பது பேச்சில் மட்டும் அல்ல, நடந்தும் காட்ட வேண்டும்.

# சேரன் சார் அடுத்துவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தா ரத்தமா?


1 comment :

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media