BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 28 August 2013

எல்லையில் ஆக்கிரமிக்கும் மியான்மர், விட்டு கொடுக்கப்படுமா ஆக்கிரமிப்பில் சிக்கிய‌ தமிழ் கிராமம்?

சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்க்கு பிறகு எல்லையில் ஆக்கிரமிக்கும் பர்மா, விட்டுகொடுக்கப்படுமா ஆக்கிரமிப்பில் சிக்கிய‌  தமிழ் கிராமம்?



பாக்கிஸ்தா, சீனா , பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தியாவின் எல்லையில் ஆக்கிரமித்து கொண்டுள்ளார்கள், இந்தியாவோ சும்மா எச்சரிக்கைகள் மட்டும் கொடுத்துக்கொண்டுள்ளன, இந்நிலையில் வடமேற்கு மாநிலமான மனிப்பூரில் சாந்தேல் மாவட்டத்தில் எல்லைப்புற நகரமான மோரே வில் உள்ள ஒலன்பே கிராமத்தில் செவ்வாய் அன்று ஊடுறுவிய மியான்மர் இராணுவம் அங்கே தற்காலிக முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

படத்தில் இருப்பது மோரே நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரன் கோவில்

இந்த கிராமங்கள் அனைத்தும் மியான்மர் எல்லையில் வருவதாக மியான்மர் ராணுவம் கோரியது. இது மட்டுமின்றி இந்த பகுதியில் பெரிய கோவில் உள்ளது, இந்த மோரே நகரத்திலும் இந்த கிராமங்களிலும் உள்ளூர் மக்களுடன் தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர், பர்மாவக இருந்த போது வெள்ளையர்கள் காலத்துக்கு பின் ஏற்பட்ட ரங்கூன் கலவரத்தின் போது துரத்தப்பட்ட தமிழர்கள் இங்கே குடியமர்ந்துள்ளனர். இந்த கிராமங்களும் கோவிலும் மியான்மருக்கு சொந்தமென்று ஆங்கிலேயர்களின் ஆவணங்களில் குறிப்பிட்டதாக மியான்மர் கோருகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அசாம் ரைஃபில் படை பிரிவினர் பின் மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகம் போன்றவைகள் மியான்மருடன் பேச்சு வார்த்தை நடந்ததில் மியான்மர் ராணுவம் வெளியேறியது ஆனால் எல்லை பகுதியில் கிராமங்களை வளைத்து முள்வேலி அமைப்பது என்ற நடவடிக்கையில் மியான்மர் ஈடுபட்டுள்ளது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்தியா.

இன்று மாநில கவர்னர் மோரே பகுதியில் அங்கிருக்கும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார், மேலும் மியான்மர் இந்தியா இணைந்து நிறுவும் செக்போஸ்ட் கட்டுமானத்தையும் பார்வையிட்டார், இந்நிலையில் மியான்மருடன் மோதலை தவிர்க்கும் விதமாக சில கிராமங்களை மியான்மருக்கு விட்டு கொடுத்துவிடலாமா  என்று மாநில அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடப்பதாக தெரியவந்துள்ளது.

# தமிழர்களின் நிலமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது, இப்போது தமிழன் கிராமம் மியான்மருக்கா? இங்கேயும் இளிச்சவாயன் தமிழன் தானா?



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media