BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 2 September 2013

விநாயகர் சதுர்த்தியை கச்சதீவில் கொண்டாடுவோம் - பொங்கலூர் மணிகண்டன்

''இந்து மக்கள் கட்சியுடன் இணைந்து ''விநாயகர் சதுர்த்தியை கச்சதீவில் கொண்டாடுவோம்''  பொங்கலூர் மணிகண்டன்


காரைக்குடியில் இன்று தொலைக்காட்சிக்கு பொங்கலூர் மணிகண்டன், கே.சி.திருமாறன் மற்றும் முகவை கணேசத் தேவர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்  'இந்து மக்கள் கட்சியுடன் இணைந்து ''விநாயகர் சதுர்த்தியை கச்சதீவில் கொண்டாடுவோம்''  என அறிவித்தனர்,

''இந்தியாவிலுள்ள மீனவ மக்களை தமிழக மீனவராகப் பார்க்கும் இந்தியாவை ஆளும் அரசு,கச்சதீவை மீட்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குக்கு அளித்த பதிலில்,கச்சதீவு  இலங்கையின் வசம் உள்ளது என்று பதில் அளித்து தமிழ் நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.

இந்தியாவுக்கும் தமிழ் மண்ணுக்கும் சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டி போராடுவது ஒவ்வொரு தமிழனின் கடமை.
நீண்டகாலமாக போராடிவரும் தமிழக மக்களின் கோரிக்கை  புறக்கணிக்கப் பட்டே வருகிறது.

ஒப்பந்தப் படி இலங்கை அரசு அங்கே வழிபாடு செய்யவும் அனுமதிக்க வேண்டும்.எனவே வருகின்ற விநாயகர் சதுர்த்தியன்று (9.9.2013)விநாயகர் சதுர்த்தி விழாவை கச்சதீவில் நடத்தும் வகையில் தடையை மீறிச் செல்ல இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு.அர்ஜுன் சம்பத் அவர்கள் அறிவித்து உள்ளார். இந்து மக்கள் கட்சியின் சார்பில் தடையை மீறி கச்சதீவில் நடைபெறும்  விநாயகர் சதுர்த்தி விழாவில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை -அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை-தேவர் தேசியப் பேரவை முழு ஆதரவு கொடுத்து கலந்து கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.''

என்று அவர்கள் பேட்டியில் கூறினார்கள்



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media