பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக மோடி நியமிக்கப்பட்ட பின் அவர் பேசும் முதல் கூட்டம் இன்று ஹரியானா மாநிலத்தில் ரேவரி மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர்கள் மத்தியில் இன்று பேசியது தான், தன் மீதான மதவாத பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர் அரசியல்வாதிகள் மதச்சார்பின்மையை இந்திய ராணுவத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர் இந்தியாவில் உள்ள வாக்கு வங்கி அரசியல் மிகவும் சங்கடப்படுத்துவதாக குறிப்பிட்டார், மேலும் இந்தியாவை துண்டு துண்டாக பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளுக்கு சொல்கிறேன் மதச்சார்பின்மையின் பெரிய எடுத்துக்காட்டாக இருப்பது இந்திய ராணுவம் என்றார்.
பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் இந்தியாவின் பிரச்சினை என்பது எல்லையில் அல்ல, டில்லியில் தான், எனவே தீர்வும் டில்லியில் இருந்து தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் பாக்கிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறுவதையும் தீவிரவாதிகளை கொண்டு மறைமுக போர் புரிவதையும் நிறுத்த வேண்டும் என்றார்.
ஒன்றரை இலட்சம் பேர் கலந்து கொண்ட கூட்டதில் பேசிய அவர் முன்னாள் ராணுவவீரர்களின் நீண்ட கால கோரிக்கையான ஒரே மாதிரியா ரேங்க்கிற்கு , ஒரே மாதிரியான பென்சன் என்பதை நிறைவேற்றுவேன் என்றார்.
முன்னாள் ராணுவ ஜெனரல் வி.கே.சிங் கும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மோடி தனது முதல் பேச்சிலேயே மதச்சார்பின்மைக்கு விளக்கம் கொடுப்பதில் போய் நின்றுள்ளார், இன்னும் தேர்தலுக்கு மிச்சம் இருக்கும் நாட்கள் முழுவதும் மதச்சார்பின்மை கிளாஸ் எடுப்பதிலும் தன்னை குஜராத் கலவரம் தொடர்பாக சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு டிஃபன்ஸ் செய்வதிலேயுமே நேரம் செலவிடப்போகிறாரா? அல்லது காங்கிரஸின் ஊழல் ஆட்சி குறித்தும் பொருளாதார சீர்கேடுகள் பற்றியும் அஃபென்ஸ் செய்யப்போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.