BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 September 2013

அண்ணா நாமம் வாழ்க, இன்று அண்ணா பிறந்தநாள்

செப்டம்பர் 15, இன்று அறிஞர் அண்ணா பிறந்த நாள்

1909ம் ஆண்டு இதே செப்டம்பர் 15ம் நாள் பிறந்த அறிஞர் அண்ணா என்று புகழப்படும் சி.என்.அண்ணாதுரை அவர்கள் பிறந்தார்.


தமிழகத்தில் பெரியாரின் கொள்கைகளான நாத்திகம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, தமிழ்மொழி மீதான தீராப்பற்று என அனைத்தையும் கடைசி வரை சமரம் செய்துகொள்ளாமல் பின்பற்றியவர், திமுகவை தொடங்கி 1967ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர் போட்ட முதல் கையெழுத்து சென்ன மாகாணம் என்ற நம் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றும் உத்தரவில் தான்.

வடமொழி கலந்திருந்த மணிப்பிரவாள நடை என்றிருந்த தமிழ்மொழியின் பேச்சு மற்றும் எழுத்து நடையை தனித்தமிழ் ஆர்வலர்களுடன் இணைந்து தூயதமிழ் நடைக்கு மாற்றியதில் பெரும்பங்கு வகித்தவர்.

இன்று அனைவரும் தளபதி, சின்ன தளபதி, இளைய தளபதி என்று தளபதி அடைமொழி வைத்துக்கொள்வது அவர்களுக்கு ஏன் என்று தெரியாமல் இருக்கலாம், தமிழகத்தில் தளபதி என்ற அடைமொழியின் மீது க்ரேஸ் ஏற்பட காரணம் அண்ணாதுரை தான், அவர் தான் பெரியாரின் தளபதி யாக செயல்பட்டதால் திகவில் தளபதி என அழைக்கப்பட்டவர். அந்த க்ரேஸ் தான் இன்று சின்ன தளபதி, இளையதளபதி என்று வந்துள்ளது.

அண்ணா ஆரம்பித்த கட்சி திமுக, அண்ணாவின் பெயரை தாங்கிய கட்சி அண்ணா திமுக, இவைகள் இரண்டும் அண்ணா வழியில் நடக்கின்றவா என்றால் இல்லை என்பதே உண்மை.

# அண்ணா நாமம் வாழ்க என்று ஒருவர் சொல்லி போடுகிறார், மற்றொருவரோ சொல்லாமல் போடுகிறார். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media