BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 8 January 2014

வெற்றிலை பாக்குக்கு 10 ரூபாய் தராததால் ஒருவர் வெட்டி கொலை

பீஹாரில், தீபக் குமார் என்ற ஒருவர், நேற்றிரவு நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம், அந்த நான்கு பேர் வெற்றிலை பாக்கு வாங்க 10ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால், தீபக் குமார் அதை கொடுக்க மறுத்ததால், அவரை அந்த இடத்திலேயே கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம், பீஹாரில் உள்ள கத்திஹர் என்ற பகுதியில் நடந்துள்ளது. இதை குறித்து காவல் துறை பேசுகையில், கத்திஹரில் உள்ள எஸ்.பி, " ஒரு பத்து ரூபாய்க்காக ஒருவரை கொலை செய்து உள்ளனர் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், அங்கு இருக்கும் மக்களை யும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது, கொலைக்காரர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க அவர்கள் கேட்டு கொண்டிருக்கின்றனர்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media