BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 8 January 2014

ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்கு பதிவு

ஏர்வாய்ஸ் என்ற மும்பையில் உள்ள நிறுவனத்தின் பெயரை, ராஜாராணி என்ற படத்தில் தவறாக பயன்படுத்தியற்தாக, அதன் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அந்நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் வெளியான ராஜாராணி திரைப்படத்தில், ஜெய் மற்றும் சத்யன் ஏர்வாய்ஸ் நிறுவனத்தில் பணிப்புரிவது போல் காட்டியுள்ளனர். ஏர்வாய்ஸ் சேவை தரத்தில் குறைபாடுகள் உள்ளது போல் சில காட்சிகள் அமைத்து இருப்பதாகவும், அதனால் நிறுவனத்தின் புகழுக்கு பாதிப்பு வரும் என, அந்நிறுவனம், ராஜாராணி தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார், தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம், மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து அவர்கள் வழக்கில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மனுதாரரான ஏர்வாய்ஸ், அந்நிறுவனத்தின் பெயரை கெடுப்பது போல் வரும் காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கேட்டு உள்ளனர்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media