BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 8 January 2014

2015 வரை தோனி தான் கேப்டன்

டெஸ்ட் தொடர், ஒரு நாள் சர்வதேச போட்டி, டி20 என அனைத்து வித கிரிக்கெட்களிலும், தானே கேப்டனாக 2015 வரை தொடர போவதாக கூறுயிருக்கிறார் மஹேந்திர சிங் தோனி.

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும், உலக கோப்பை போட்டிக்கு ஒரு வருட அவகாசமே இருப்பதனால், புதிதாக வேறு ஒருவர் கேப்டனாக வந்தால், அது அவருக்கு மிக கடினமாக இருக்கும் எனவும், அதனால் 2015 வரை ஒய்வு பெறுவது சரியான முடிவு இல்லை எனவும் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டில்  டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக தொடர்வது பற்றி, தான் 2013 இறுதியில் முடிவெடுக்க போவதாக கூறியிருந்தார் தோனி. 

முன்பெப்போதும் இருந்ததை விட, தன் உடல் நிலை சரியாக இருப்பதாகவும், தானே மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும், கேப்டனாக தொடர போவதாக அறிவித்து இருக்கிறார் கேப்டன் கூல்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media