BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 12 January 2014

15 வயது சிறுவனுடன் 16 வயது சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு

சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்த  15 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டு, பெற்றொருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்தனர். ஒரு நாள், இருவரும் காணாமல் போனதை அடுத்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், சிறுமியின் பெற்றோர்.

காவல்துறை விசாரணையின் போது, இருவரும், விழுப்புரத்தில் இருப்பதாக தெரிய வந்தது. உடனே, போலீஸாரும், பெற்றோரும் விழுப்புரத்திற்கு சென்று, பார்த்த போது, அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து, இம்மாதம் 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருக்கின்றனர். அதுவரை சிறுவன், ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சிறுமி கெல்லீஸ் மகளிர் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media