தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசால், கைது செய்து வைக்கப்பட்ட மீனவர்கள், இன்று முதல் விடுவிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார்.
கைது செய்து இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ள, 275 தமிழக மீனவர்களில், பெரும்பாலோனோர் விடுவிக்க படபோவதாக, மத்திய அரசிடம் இருந்து செய்தி வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழக சிறைகளில் வைக்கப்பட்டுள்ள, 179 இலங்கை மீனவர்களும், விடுவிக்கப்பட வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இரு நாடுகளின் மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், சென்னையில் வரும் 20ம் தேதி சந்தித்து, இப்பிரச்ச்னை பற்றி கலந்துரையாடுவர் என கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.