BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 12 January 2014

கரிப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்

காஷ்மீரில் கடுமையான பனியால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல இயலாது. இந்நிலையில், தவார் கிராமத்தை சேர்ந்த முஹம்மது அஷ்ரப் என்பவரின் மனைவி, 6 மாத கர்ப்பிணியான இருப்பதாகவும், அவருக்கு, கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தில் இருப்பதாகவும்,  ராணுவ தலைமை அலுவலகத்துக்கு ஓடி வந்து, தன் மனைவி மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற உதவ வேண்டுமென கதறி இருக்கிறார்.

இந்த விஷயம், ராணுவ உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க பட்டது. உயிருக்கு போராடும் கர்ப்பிணி பெண்ணையும் அவரது வயிற்றுக்குள் இருக்கும் கருவையும் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதற்காக அந்த‌ ராணுவ உயரதிகாரி, விமானப்படையின் நவீன ரக எம்.ஐ.-17 ஹெலிகாப்டரை அந்த கிராமத்துக்கு அனுப்பி வைத்தார். வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை கிராமத்தில் இருந்து ஏற்றி சென்ற ஹெலிகாப்டர்,   அவரை அரசு மருத்துவமனையில் இறக்கி விட்டது.

இதே போல், கடுங்காய்ச்சலால், உயிருக்கு போராடி கொண்டிருந்த வேறொருவரையும், விமானப்படை ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்க்க ராணுவத்தினர் உதவி செய்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media