BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 12 January 2014

ஒரு ரூபாய்க்கு, ஆம் ஆத்மிக்காக வேலை பார்க்கும் அதிகாரிகள்

முன்னாள் அரசு அதிகாரிகள் இருவர், ஆம் ஆத்மிக்காக, டெல்லியில் லஞ்சத்தை ஒழிக்க மற்றும் சுயஆட்சி திட்டத்தை கொண்டு வருவதற்கு, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு, உதவ போவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

மத்திய பிரதேச முன்னாள் தலைமை செயலாளர் பெஹர், டெல்லியில் சுயஆட்சி திட்டம் கொண்டு வருவதற்கும், மற்றும் டெல்லி முன்னாள் காவல் துறை இணை ஆணையர் திலீப் குமார், டெல்லியில் லஞ்சத்தை ஒழிக்க அமைக்கப்பட்டிருக்கும், ஹெல்ப்லைனை கண்காணிக்கவும், பணியில் ஈடுபட இருக்கின்றனர். இதற்காக இவர்கள் பெற போவது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே.

லஞ்ச ஒழிப்புக்காக அமைக்கபட்ட 1031 ஹெல்ப்லைன் எண்னுக்கு,இரண்டே நாட்களில், 23,000 அழைப்புகள் வந்துள்ளது.

"என்னுடைய பங்களிப்பு, எந்த தனிப்பட்ட கட்சிக்கும் இல்லை, டெல்லி அரசுக்கே ஆகும்" என்று, பெஹர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media