BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 12 January 2014

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவி கூட்டு கற்பழிப்பு, அதில் பங்களித்த போலீஸ்காரர்

உத்தர பிரதேசத்தில், மோடிநகர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவி மூன்று பேரால் கற்பழிக்கப் பட்டுள்ளார். இதில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள், பெயர் நிதின்.

டிசம்பர் 4ம் தேதி, ட்யூஷனில் இருந்து, வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, கரண் என்கின்ற தன் பக்கத்தில் வீட்டில் இருக்கும் ஒருவன், தனியான இடத்திற்கு, அழைத்து சென்று, தன் நண்பர்கள் கேஷவ் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளான நிதின் என்போரை வரவழைத்து மாறி மாறி கற்பழித்தனர் என்று அந்த‌ பெண், காவல் துறையில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார்.

கற்பழிப்பு சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்து, இதை பற்றி புகார் கொடுத்தால், இன்டர்நெட்டில் அப்லோட் செய்துவிடுவதாகவும், அப்பெண்ணை மிரட்டி இருக்கிறார், கான்ஸ்டபிள்  நிதின். இதை சொல்லியே, இது வரை பல முறை, மூவரும் தன்னை கற்பழித்ததாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, குற்றம் புரிந்த மூவரையும், கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media