BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 19 January 2014

காங்கிரஸிடம் நாங்கள் ஆதரவு கேட்கவில்லை- கேஜ்ரிவால்



டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் ஆம் ஆத்மி கட்சி, யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை எனவும், காங்கிரஸ் கட்சிக்கு தான் பயந்து நடக்கவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்றும் தெரிவித்து இருந்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது:

டெல்லியில் ஆட்சி அமைக்க நாங்கள் காங்கிரஸிடம் ஆதரவு அளிக்குமாறு கேட்கவில்லை. அவர்களாகவே தான், வலிய முன் வந்து, ஆதரவு அளித்தனர். நாங்கள் அவர்களிடம் பேசியதும் இல்லை, அவர்களை சந்தித்ததும் இல்லை.

2010–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்த‌ ஊழல் மற்றும் குடிநீர் வாரிய ஊழல் ஆகியவை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் சில நாட்களில், ஊழலில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மீதும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்க போகிறோம். எங்களுக்காக ஆதரவு அளித்தது, காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த வருத்தத்தை தர போகிறது. வேண்டுமென்றால், அவர்கள் கொடுத்த ஆதரவை திரும்ப பெற்று கொள்ளலாம்.

மேலும், டெல்லி முன்னாள் முதல் அமைச்சர் ஷீலா தீட்சீத் மகன் சந்தீப் உடன் தனக்கு நட்பு இருக்கிறது என கூறப்படுவது உண்மை இல்லை எனவும் கூறியிருக்கிறார் கேஜ்ரிவால்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media