பா.ஜ.க வின் தேசிய கவுன்சில் கூட்டம் மூன்று நாட்களாக டெல்லியில் உள்ள
ராம் லீலா மைதானத்தில் நடந்தது. நிறைவு நாளான இன்று, பா.ஜ.க.வின் பிரதமர்
பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மோடி
பேசியதாவது:
2014 பாராளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் வரலாற்றில்
மிக முக்கியமான தேர்தல். இந்திய வரலாற்றிலே மிக பெரும் ஊழல்கள் இந்த 10
வருட காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்துள்ளது. காங்கிரஸ், தங்கள் கட்சியை
பாதுகாக்க பார்க்கிறது. பா.ஜ.க., நாட்டை பாதுகாக்க பார்க்கிறது. சமீபத்தில்
டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர்
யார்? என்று அறிவிக்கப்படும் என நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், அதை கூறாமல், வீடுகளுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்கள்
ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை சொல்கிறது காங்கிரஸ்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்க போவது உறுதியாகி விட்ட
நிலையில், தன் மகனை தியாகம் செய்ய சோனியா முன் வரவில்லை. மேலும், ஒரு
டீக்கடைக்காரனை எதிர்த்து நம் மகனை நிறுத்துவதா? என்று தோன்றி இருக்கலாம்.
தோல்வியில் இருந்து காப்பாற்றுவதற்காகவே ராகுல் காந்தியை காங்கிரசின்
பிரதமர் பதவி வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கவில்லை என்றும் மோடி
கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.