மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியின் மரணம் இயற்கையானது அல்ல, மேலும் அவர் உடலின் மேற்புறத்தில் காயஙக்ள் இருந்ததாக, அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவர் இறப்பதற்கு முன்பு, தன் கணவர் சசி தரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, சுனந்தாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சசி தரூர் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல், வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இதையடுத்து, சுனந்தாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சசி தரூர் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல், வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.