BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 19 January 2014

டெல்லி நீதி துறை அமைச்சர் சோம்நாத் பாரதி மீது குற்றச்சாட்டு

உகண்டா நாட்டை சேர்ந்த நான்கு பெண்கள், டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த போது, அமைச்சர் சோம்நாத் பாரதி மற்றும் அவருடன் இருந்த நபர்கள், அந்த பெண்கள் வந்த காரை வழி மறைத்து நிறுத்தி, சத்தம் போட்டு பயமுறுத்தினர் என்றும், தங்களிடம் நடந்து கொண்ட முறை கண்டனத்திற்குரியது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்நேரத்தில் டெல்லி போலீசார் வந்து, தங்களை காப்பாற்றினர் என்றும், அமைச்சர் மற்றும் அவருடன் இருந்தவர்கள், தங்களை குற்றவாளிகளை போல நடத்தினர் என்றும், இதற்காக அமைச்சர் சோம்நாத் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உகண்டா பெண்கள், ஆவேசமாக கூறியிருக்கின்றனர்.  டெல்லி போலீசார் மட்டும் வரவில்லை என்றால், தங்களை அந்த கும்பல் கொன்று இருப்பனர் என்று அப்பெண்கள் கூறியிருக்கின்ற்னர்.

இதை பற்றி சல்மான் குர்ஷித் பேசுகையில், "இது போன்ற சம்பவங்களால், மற்ற நாடுகளிடம் இந்தியாவின் புகழ் பாதிக்கப்படும்.  நடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சிகரமானது மற்றும் ஏற்று கொள்ள முடியாதது. ", என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, சோம்நாத் பாரதி மீதும் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள் மீதும், டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு நடத்த இருக்கின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media