திருவள்ளூர் அருகே இயங்கி வந்த டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு அளித்த அங்கீகாரம், இந்திய மருத்துவக் கல்வி கவுன்சிலால் ரத்து செய்யப்பட்டு, அக்கல்லூரி கல்லூரி மூடப்பட்டது. அந்த கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் எதிர்காலம் கேள்வி குறியானதால், மாணவர்கள், டி.டி. கல்லூரியை அரசு ஏற்று நடத்தக் கோரியும், தங்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் ஒதுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி கே.கே.சசிதரன், டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கலாம் என்றும், அரசுக் கல்லூரிகளில் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் கூடுதல் இடங்களை ஏற்டபடுத்துமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி கே.கே.சசிதரன், டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கலாம் என்றும், அரசுக் கல்லூரிகளில் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் கூடுதல் இடங்களை ஏற்டபடுத்துமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.