பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்று பா.ஜ.க. அதீத
நம்பிக்கையில் இருக்க வேண்டாம், 2004 நடந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு
அதீத நம்பிக்கையே காரணம் என அத்வானி கூறியுள்ளார்.
பா.ஜ.க. தேசிய
கவுன்சில் கூட்டத்தில் பேசிய அத்வானி, பத்து வருடங்கள் கழித்து ஆட்சிக்கு
மறுபடியும் வருவதற்கான முயற்சிகளில் எந்த தொய்வும் இருக்க கூடாது. அதீத
நம்பிக்கையில், வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுக்காமல் விட்டு விட
கூடாது, 2004ல் பா.ஜ.க தோல்வியை கண்டதற்கு காரணங்களில் ஒன்று அதிகமான
நம்பிக்கை என்று அவர் பேசியுள்ளார்.
மேலும், இஸ்லாமியர்களின்
நம்பிக்கையை பெற வேண்டும், அவர்களுக்கு தெரியும் ஓட்டிற்காக தான் அவர்கள்
பயன்படுத்த படுகிறார்கள் என்றும், எந்த கட்சியும் அவர்களுக்கு ஏதும்
செய்யவில்லை என்றும், என அவர் கூறினார்.
பா.ஜ.க ஜாதி, மதம்,
மொழி என்று எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை, அனைவருக்காகவும் பாடுபடுகிற
கட்சி என்று அத்வானி தெரிவித்துள்ளார். மேலும், மோடியை பிரதமர் வேட்பாளராக
அறிவித்ததற்காக, ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.