BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 20 January 2014

தமிழகத்தில் ஆம் அத்மி தனித்து நின்று போட்டியிடும்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் புதிதாக ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர். அடுத்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் 5 லட்சம் பேரை புதிதாக சேர்க்கும் திட்டத்தில் அக்கட்சி உள்ளது.  மேலும், தமிழகத்தில் தனித்து ஆம் ஆத்மி போட்டியிடும் என்றும், தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரங்க‌ள் பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் பிரசாந்த் பூஷண் அறிவித்துள்ளார்.

திமுக, அதிமுக ஆகியவை ஊழல் நிறைந்த கட்சிகளாக உள்ளன என்று தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகளை பூஷன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய இந்தியா தவறிவிட்டது. இதுபோல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தவும் இந்திய அரசு தவறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media