BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 20 January 2014

சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு காரணம், அளவிற்கு அதிகமான மருந்துகள்

சுனந்தா புஷ்கரின் மரணத்திற்கான காரணங்கள் அவரது பிரதே பரிசோதனைக்கு பிறகு தெரிய வந்துள்ளது. அளவிற்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு இருக்கிறார் சுனந்தா என்றும், அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஓட்டல் அறையில் போலீசார்,  மன சோர்வை எதிர்க்க பயன்படும் மாத்திரைகள் நிறைய இருந்தன என்றும் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனையில், சுனந்தாவின் உடலில், 12 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், ஆனால், அதனால் சுனந்தாவிற்கு மரணம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சுனந்தாவின் மரணம் பற்றி சசி தரூரிடம் விசாரணை நடந்துள்ளது. அவர் கொடுத்த வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுனந்தாவின் மரணத்திற்கான சரியான காரணங்கள் இன்னும் இரண்டு நாட்களில் தெளிவாக தெரிந்து விடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media