BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 20 January 2014

சுனந்தா மரணத்தின் பின்னனி

கடந்த 15ம் தேதி, திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் மத்திய அமைச்சர் சசி தரூரும், அவரது மனைவி சுனந்தாவும் சென்று இருக்கின்றனர். அப்போது அவர்கள், விடாமல் சண்டை போட்டு கொண்டே இருந்தனர் என்று சக பயணிகள் தெரிவித்து இருக்கின்றனர். அவர்களின் வாக்குவாதம், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பெண் மேஹருக்கும், சசி தரூருக்கும் இடையேயான தொடர்பு பற்றியே இருந்தது என தெரிய வந்துள்ளது. அதே விமானத்தில், மும்பையில் ஏறியிருக்கிறார், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி. அவரும், இந்த தம்பதிகள் போட்டு வந்த சண்டையை கேட்டு கொண்டு இருந்தார் என தெரிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்திலும் அவர்களது சண்டை முடியவில்லை.

பின்னர், 15ம் தேதி அன்றே, ஓட்டல் லீலா பேலஸிற்கு வந்த சுனந்தா, அழுது கொண்டே வந்தார் எனவும், அங்கிருந்த ஓட்டல் ஊழியர்கள் தான் அவர்களை சமாதானம் செய்து இருக்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக, தனது தோழியும், பிரபல பத்திரிக்கையாளருமான நளினி சிங்கிற்கு போன் செய்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நளினி, சுனந்தா தனது கணவருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளருமான மெஹர் தராருக்கும் இடையேயான உறவால் மன அழுத்தத்தில் இருந்தார். தரூரும், மெஹரும் இமெயில் மற்றும் பிளாக்பெர்ரி மூலம் தகவல் பரிமாறிக் கொண்டதை அழுது கொண்டே தெரிவித்தார், என கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media