BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 17 January 2014

தேநீர் விற்ற மோடி தான் காங்கிரஸ் வாரிசு அரசியலை தகர்க்க போகிறார், பா.ஜ.க பதிலடி

மோடியால் பிரதமராக முடியாது, அவருக்கு டீக்கடை வைத்து தருகிறோம், காங்கிரஸ் கூட்டத்தில் அவர் டீ விற்கட்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறியிருந்தார்.

சாதாரண முன்னாள டீ விற்பனையாளரான மோடி தான், காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலுக்கு ஒரு முற்று புள்ளி வைத்து, நாட்டின் பிரதமராகி, இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த போகிறார். அதற்கான நாள் நெருங்கி விட்டது என பதிலடி கொடுத்து இருக்கிறார், பா.ஜ.க வை சேர்ந்த அருண் ஜெட்லி.

மோடி, டீ விற்க தான் சரியானவர் என்று கூறியதற்காக, தான் மன்னிப்பு கேட்க முடியாது என மணி சங்கர் அய்யர் கூறியுள்ளார். அரசியலில் இருப்பது, வீட்டின் ஓய்வு அறையில் இருப்பது போன்று அல்ல. அது ஒரு குத்து சண்டை நடக்கும் இடம் போன்றது. சூட்டை தாங்க முடியாதவர்கள், அரசியலை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media