BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 17 January 2014

மும்பையில் டி.சி.எஸ் ஊழியரான பெண் ஒருவர் கற்பழித்து, எரிக்கப்பட்டிருக்கிறார்

ஆந்திராவில் உள்ள விஜயவாடாவை சேர்ந்த அனுயா என்கின்ற 23 வயது பெண் ஒருவர், மும்பையில் டி.சிஎஸ் கம்பெனியில், சாப்ட்வேர் துறையில் பணி புரிந்து வருகிறார். விடுமுறைக்காக, தன் வீட்டிற்கு வந்திருந்த அவர், ஜனவரி 4ம் தேதி, விஜயவாடாவிலிருந்து ரயிலில் மும்பை புறப்பட்டுச் சென்றார். தன் தந்தை பிரசாத்திடம், தான் விடுதிக்கு சென்று அடைந்ததும், போன் செய்து தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால், அவரின் நண்பர்களிடமும், அவர் தங்கிருந்த இடத்தையும் தொடர்பு கொண்டு தன் மகளை பற்றி விசாரித்து இருக்கிறார் பிரசாத். தகவல் ஏதும் கிடைக்காததால், மும்பை மற்றும் விஜயவாடா போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கிறார்.

போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போது, ஒரு பெண்ணின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கூறி, பிரசாத்தை அவரின் மகளா என்று அடையாளம் காட்ட அவரை அழைத்தனர். நேரில் சென்று பார்த்த பிரசாத், எரிக்கப்பட்ட நிலையில் இருந்த சடலம் தன் மகளுடையது என  அடையாளம் காட்டியிருக்கிறார்.

ரயிலில் பயணம் செய்த அனுயா, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, இந்த கொடூரமான குற்றம் புரிந்தவர்கள் யார் என்று, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media