BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 17 January 2014

கற்பழிப்புக்கு இணங்க மறுத்த சிறுமி தீ வைத்து கொளுத்தப்பட்டார்

உத்தர பிரதேசத்தில் உள்ள புலாந்த்ஷார் மாவட்டத்தில் உள்ள பஹாசு என்ற பகுதியில், 16 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிலேயே, மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப் பட்டிருக்கிறார். அந்த சிறுமி தனியாக வீட்டில் இருக்கும் போது, ஒருவர் வீட்டினுள் புகுந்து, அவரை கற்பழிக்க முயன்று இருக்கிறார். அதற்கு அவர் இணங்காததால், எவ்வளவோ முயன்று பார்த்தும், தன் ஆசைக்கு இடம் கொடுக்காத அந்த சிறுமியின் மீது கோபம் அடைந்து , மண்ணெண்ணெய் ஊற்றி அவரை கொளுத்தி இருக்கிறார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உடல் 90% எரிக்கப்பட்டிருக்கிறது எனவும், அவர் உயிர் பிழைக்காமல் போகலாம் என்று கூறியிருக்கின்றனர்.

போலீஸார், கற்பழிப்பு மற்றும் கொலை செய்ய முயன்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவனை தேடி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media