BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 17 January 2014

மோடிக்கு டீக்கடை வைத்து தருகிறோம்


பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய நாட்டின் பிரதமராக பதவி பெற முடியாது, அவர் விரும்பினால் நாங்கள் அவருக்கு டீக்கடை வைத்து தருகிறோம், காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்கட்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி பா.ஜ.க தரப்பினரை கேட்ட போது, "மணி சங்கருக்கு இப்படி பேசுவதை தவிர வேறு என்ன தெரியும்?" என்று பதில் அளித்தனர்.

இதே போன்று, கடந்த ஆண்டு, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நரேஷ் அகர்வால், மோடியை பற்றி பேசுகையில், டீக்கடை வைத்திருந்தவர் எல்லாம், நாட்டின் பிரதமராக முடியாது என கருத்து கூறியிருந்தார்.

டீக்கடை வைத்திருந்தவர் நாட்டின் பிரதமராக முடியுமா அல்லது முடியாதா என்ற கேள்விக்கு அடுத்த வருட நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் பதில் சொல்லும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media