தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்துக்கும், மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பறக்கும் ரயில் நிலையத்துக்கு ‘முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
பயணிகள் வசதிக்காக, நிறுவப்பட்டிருக்கும் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட ஆன செலவு, ரூ. 30 கோடி ஆகும். புதிய ரயில் நிலையம் கட்டப்படும்போது அந்தந்த மாநில முதல்வர் தான் புதிய ரயில் நிலையத்தின் பெயரை முடிவு செய்து அறிவிப்பார். தமிழக அரசுக்கு, ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்த பெயர்கள், திருவள்ளுவர் ரயில் நிலையம், மாதவப் பெருமாள் ரயில் நிலையம், சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம், முண்டகக்கண் ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்பனவாகும். இந்நிலையில், ஜெயலலிதா, புதிய பறக்கும் ரயில் நிலையத்திற்கு, 'முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்ற பெயரை சூட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய ரயில் நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் அனைத்தும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பயணிகள் வசதிக்காக, நிறுவப்பட்டிருக்கும் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட ஆன செலவு, ரூ. 30 கோடி ஆகும். புதிய ரயில் நிலையம் கட்டப்படும்போது அந்தந்த மாநில முதல்வர் தான் புதிய ரயில் நிலையத்தின் பெயரை முடிவு செய்து அறிவிப்பார். தமிழக அரசுக்கு, ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்த பெயர்கள், திருவள்ளுவர் ரயில் நிலையம், மாதவப் பெருமாள் ரயில் நிலையம், சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம், முண்டகக்கண் ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்பனவாகும். இந்நிலையில், ஜெயலலிதா, புதிய பறக்கும் ரயில் நிலையத்திற்கு, 'முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்ற பெயரை சூட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய ரயில் நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் அனைத்தும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.