அழகிரியை திமுகவை விட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கியுள்ள நிலையில், அவருடன் கட்சியினர் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக அறிவித்துள்ளது. இதையும் மீறி, திமுக எம்.பிக்கள் நெப்பொலியன், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் கே.பி. ராமலிங்கம், அழகிரியை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கின்றனர். அதோடு அல்லாமல், இறுதி வரை தங்கள் ஆதரவு அழகிரிக்கே என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறது திமுக தரப்பு.
தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் ராமலிங்கம், திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்தவர் தான், ஆனால் இப்பொழுது எப்படி அழகிரி பக்கம் சாய்ந்தார் என்பது பலருக்கும் விளங்கவில்லை. நெப்போலியனோ, அழகிரியின் தீவிர ஆதரவாளராக திகழ்ந்து வருகிறார். கலவர பின்னணி மற்றும் வன்முறை வரலாற்றை உடைய ஜே.கே.ரித்தீஷும், அழகிரி பக்கம் சாய்ந்து இருக்கிறார்.
அழகிரியை கட்சியை விட்டு நீக்கியபோது, யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறி, அழகிரியோடு தொடர்பு வைத்து கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவருக்கு ஆதரவு அளித்து, இறுதியுடன் அவருடன் இருப்பதாக கூறி உறுதி அளித்து இருக்கின்றனர். அதற்காக, இந்த மூவர் மீதும் கட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.
தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் ராமலிங்கம், திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்தவர் தான், ஆனால் இப்பொழுது எப்படி அழகிரி பக்கம் சாய்ந்தார் என்பது பலருக்கும் விளங்கவில்லை. நெப்போலியனோ, அழகிரியின் தீவிர ஆதரவாளராக திகழ்ந்து வருகிறார். கலவர பின்னணி மற்றும் வன்முறை வரலாற்றை உடைய ஜே.கே.ரித்தீஷும், அழகிரி பக்கம் சாய்ந்து இருக்கிறார்.
அழகிரியை கட்சியை விட்டு நீக்கியபோது, யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறி, அழகிரியோடு தொடர்பு வைத்து கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவருக்கு ஆதரவு அளித்து, இறுதியுடன் அவருடன் இருப்பதாக கூறி உறுதி அளித்து இருக்கின்றனர். அதற்காக, இந்த மூவர் மீதும் கட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.