BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 30 January 2014

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட நர்சிங் மாணவிகள் 400 பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நர்சிங் பயிற்சி பெறும் மாணவிகள் கடந்த 3 நாட்களாக, பணிக்கு செல்லாமல் பயிற்சி பள்ளி உள்ளே
 உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

அரசு கல்லூரிகளில் படித்த நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என‌உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று காலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முன்பு திடீரென 400 நர்சிங் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதனால் அங்கு சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  உடனே அங்கு ஐம்பது பெண் போலீசார்கள் வந்து, போராட்டம் நடத்தி கொண்டிருந்த நர்சிங் மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து மோதலும் ஏற்பட்டதில், சில மாணவிகள் மயக்கம் அடைந்து விழுந்துனர். பின்னர் நர்சிங் மாணவிகள் 400 பேரையும் போலீசார் கைது செய்து அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media