
சேலத்தில் நேற்று நடந்த பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொண்ட இல.கணேசன், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்த ஆலோ சனையில் ஈடுபட்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யவே தேவையில்லை. ராகுல் காந்தி பேசினாலே, மோடி வெற்றி பெற்று விடுவார் என கூறினார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்த எந்த தகுதியும் இல்லாததால்தான், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வருகிறது என்றும் கூறினார்.
மேலும் கூட்டணி அமைப்பதை பற்றி பேசிய அவர், தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளுடன், பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், பா.ஜ.க அமைக்க போகும் கூட்டணி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு சவால்விடும் கூட்டணியாக இருக்கும் என்றும் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.