
சென்னையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது என்றும், விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது என்றும், மக்களுக்கு இடையூறாக இருக்கும் அச்சிலையை அகற்ற வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், சாதித் தலைவர்களின் சிலைகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் மேல் என்றும், அச்சிலைகளையும் அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மக்களுக்கு இடையூறாக உள்ள அத்தனை சிலைகளையும் கண்டறிந்து அகற்ற ஒரு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் ரமேஷ் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.