BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 February 2014

40 கிலோ கல்லை சுமந்து கொண்டு கர்ப்பம் என ஏமாந்த‌ பெண்

சண்டிகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறி, மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் தன் வயிறு பெரிதாக இருப்பதை கர்ப்பம் என்றும் நினைத்து கொண்டிருந்தார். அவரது வயிற்றைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் கல் இருப்பதைக் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாக வயிற்றில் அந்தக் கல்லுடன் இருந்துள்ளார் அப்பெண். மருத்துவர்கள் விசாரித்ததில் வயிறு வீங்கி இருப்பதற்குக் காரணம் கர்ப்பம் என அவரது குடும்பத்தார் புரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலம் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார் 40கிலோ எடையுள்ள கல் அகற்றப்பட்டது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media