BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 February 2014

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கட்டாய ரத்த தானம்?


பிப்ரவரி 24ந் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். இதையொட்டி ரத்த தானத்தில் கின்னஸ் சாதனை செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் 10 நகரங்களில் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மதுரை மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் ரத்ததான முகாமில் கட்டாயம் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். மேலும் அப்படி கலந்து கொள்கிறவர்களுக்குத்தான் விடுமுறையுடன் சம்பளம் தருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் (ஆர்.டி.ஓ), டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வருகிறவர்களிடம் ரத்ததானம் கொடுக்க சம்மதித்தால்தான் லைசென்ஸ் தரப்படும் என்று கூறுவதாகவும். தனியார் பேருந்துகள் வைத்திருப்பவர்களும் ரத்ததானத்திற்கு ஆட்கள் அனுப்ப கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல கல்லூரிகளுக்கும் கூட விடுப்பு கொடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு செலவுக்கு பணமும் கொடுத்து முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media