ராணுவ பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், 'கேப்டன்' என்ற அடைமொழியை சினிமாக்காரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயகாந்த் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலருக்கு, முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் கோவிந்தராஜ் கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கேப்டன் என்ற அடைமொழியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இது, அரசியல் சட்டத்துக்கு முரணானது. 1950ல், இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடை செய்யும் பிரிவின் படி, ராணுவ அதிகாரிகளே, 'கேப்டன்' என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும். சாதாரண குடிமக்கள் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது." என்று கூறியுள்ளார்.
மேலும், இது பற்றி அவர் விஜயகாந்திற்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும், அவர் கேப்டன் என்ற பெயரை பயன்படுத்துவதை இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறுத்தாவிட்டால், தான் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.