BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 February 2014

லோக்பால் மசோதா தாக்கல் செய்யபடவில்லை; சொன்னபடி கேஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா?


 டெல்லி சட்டப்பேரவையில், நேற்று ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த அரவிந்த் கேஜ்ரிவால் முயன்றபோது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

இன்று டெல்லி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் ஜன்லோக்பால் மசோதா மீதான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பெரும் அமளிக்கு இடையே, சட்டசபையில் ஜன் லோக்பால் தாக்கலானது. அப்பொழுது கேஜ்ரிவால், " இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன். இதன் மீது விவாதம் நடத்துவதா அல்லது ஓட்டெடுப்பு நடத்துவதா என்பது குறித்து அவை முடிவு செய்யும்." என்றார்.

பின்னர் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஓட்டெடுப்பு நடந்த‌து. அப்போது 42 எம்.எல்.ஏக்கள் ஜன்லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம் ஆத்மியின் 27 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஜன்லோக்பால் மசோதாவை ஆதரித்தனர். இதனால் ஜன்லோக்பால் மசோதாவை அறிமுகம் செய்ய சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால் முதல்வர் கேஜ்ரிவால் ஏற்க‌னவே அறிவித்தபடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media