BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 February 2014

மானபங்கத்திலிருந்து தப்பிக்க, ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி

மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவருடன் இருந்த இளைஞர்கள் சிலர், அவரை மானபங்கம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, அந்த மாணவி ஓடும் ரெயிலில் இருந்து குதித்து இருக்கிறார். அதனால் அப்பெண் படுகாயமடைந்தார்.

பொதுமக்கள் சிலர் காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு அருகேயுள்ள டம்லுக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாவே உள்ளதாகவும் அதே சமயத்தில் அவர் குணமாகும் வாய்ப்புகள் நிறைய‌ உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media