ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரேந்திர ரெட்டி என்பவருக்கு 37 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முன்பு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், அங்கிருந்த மூன்று சிறுமிகளை சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று எரித்துக் கொலை செய்துவிட்டார். இதற்கிடையே சிறுமிகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சிறுமிகளை தேடியபோது அவர்களின் எரிந்த உடல்கள் நிஜாமாபாத் நகருக்கு வெளியே கிடப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நரேந்திர ரெட்டியை தேடி வருகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.