உத்தரபிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் தனது விவாகரத்து வழக்கு தொடர்பாக வக்கீலை சந்திக்க நேற்று காசியாபாத் நகருக்கு வந்தார். அங்குள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவரிடம், காரில் இருந்து இறங்கி அறிமுகமான நபர் நலம் விசாரித்தார். சற்று நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் தனது கஷ்டத்தை எல்லாம் அவரிடம் கூறி, ‘எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி தந்தால் உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
’லோனி பகுதியில் இருக்கும் என் நண்பர் ஒருவர் வேலைக்கு ஆள் தேவை என்று சொன்னார். என்னுடன் வந்தால் அந்த வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறிய அந்த நபர் அவரை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். கார் சிறிது தூரம் சென்றதும் அதில் மேலும் 3 பேர் ஏறி அந்த பெண்ணை ஓடும் காரிலேயே சுமார் ஒரு மணி நேரத்துக்கு கற்பழித்து விட்டு, அவரை இறக்கி விட்டு, சென்றனர்.
கற்பழிப்பில் ஈடுபட்ட நால்வரையும், போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.