BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 20 February 2014

ஏழு தமிழர் விடுதலை; தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் எதிர்ப்பு

 

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், தீவிரவாதத்துக்கு எதிராக எந்த ஒரு அரசும், அரசியல் கட்சியும் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது. ராஜிவ் படுகொலை என்பது நாட்டின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஏழு பேரை விடுதலை செய்வது என்பது நீதித்துறையின் அனைத்து மாண்புகளுக்கும் முரணானது. தமிழக அரசின் முடிவு சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media