ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தது. இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார். மேலும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் கேட்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.