BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 20 February 2014

சென்னையில் அம்மா திரையரங்கம்: மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு


சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சே.சந்தானம் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக  தொடக்க உரையில் மேயர் சைதை துரைசாமி பேசிய போது, "சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் வணிக வளாகங்களாக மாறி அதிக கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். எனவே, ஏழை எளிய மக்களுக்காக குறைந்த கட்டணம் வசூலிக்கும் அம்மா திரையங்குகள், தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள இடங்களில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்றும், அங்கு குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்களுக்கு முன்னுரிமைத் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media