பி.வாசு இயக்கும் ‘‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’’ என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கப் போவதாக செய்தி வெளியானது. இந்த படத்தின் கதையை பி.வாசுவிடம் கேட்ட ஐஸ்வர்யாராய் ‘வாவ்’ என சொல்லியதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி உண்மை இல்லை என ஐஸ்வர்யாராய் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யாராய் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பி.வாசு இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. நிறைய பேர் ஐஸ்வர்யாராயை அணுகி கதைகள் சொல்லி உள்ளனர். அதில் பி.வாசு சொன்ன கதையும் ஒன்றாக இருக்கலாம். அந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை.
இதைப் பற்றி பேசிய ஐஸ்வர்யாராய், "என்னிடம் அறுபதுக்கும் மேற்பட்டோர் கதை சொல்லி உள்ளனர். அதில் ஒரு கதையாக பி.வாசு சொன்ன கதையும் இருக்கலாம்." என்று கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.