BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 February 2014

"விஜயகாந்த் நடிக்காதது பெரிய இழப்பு"

மறுமுகம் என்ற க்ரைம் திரில்லர் படத்தினை இயக்கி இருக்கும் புதுமுக இயக்குநர் கமல் சுப்பிரமணியம், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்த போது, ""இந்தப் படம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாகச் சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம்." என்று கூறினார்.

மேலும், விஜயகாந்த் சினிமாவில் இல்லாததால் பெரிதாக திரைப்பட கல்லூரி மாணவர்கள் பாதிக்க பட்டிருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். இதை பற்றி பேசிய அவர், "திரைப்படக்கல்லூரி மாணவர்கள் நாங்கள் முதலில் கதை சொல்ல செல்வது கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எல்லாரது முதல் கனவும் அதுவாகவே இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும் செல்லும் இடம் ராஜாபாதர் தெருவாகத்தான் இருக்கும். அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநர் ஆக்கியவர்.  அவர் இப்போது நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்" என்று தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media