BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 February 2014

டீக்கடையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் எத்தனை! அவமானங்கள் எத்தனை!


நேற்று அகமதாபாத்தில் டீக்கடையில் அமர்ந்த படி மக்களுடன் கலந்துரையாடிய‌ மோடி, சாதாராண மக்கள் நினைப்பதைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள டீக்கடைகள்தான் சரியான வழி என்றும், டீக்கடைகள்தான் நாட்டின் நாடாளுமன்றம் என்றும் உரைத்தார். அவர் டீ விற்ற நாட்களில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் அவமானங்கள் ஏராளம் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், "தொழில்நுட்பம் மூலம் இன்று நாடு முழுவதும் மக்களுடன் நான் டீ சாப்பிட்டபடி உரையாட முடிந்திருக்கிறது. இனிமேல் இதேபோல வீடியோ கான்பரன்சிங் மூலம் 2 கோடிப் பேருடன் பேசப் போகிறேன்",  என்று கூறினார்.

டீக்கடையில் தனக்கு வேலை பார்க்க கிடைத்த வாய்ப்பு, மிக சிறந்தது என்றும், அதற்காக, தான் தேநீருக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

தேநீர் விற்ற வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு, நாட்டின் பிரதமர் வேட்பாளர் அளவுக்கு வந்த மோடி, உங்களை கவர்ந்து இருந்தால், லைக் போடுங்கள்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இது தானோ!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media