BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 February 2014

இயக்குனர் பாலு மகேந்திரா மரணம்



தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். உடல்நிலை சரியில்லாமல் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திற்கு முன் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.

மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இவர், ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரும் ஆவார். புகழ் பெற்ற இயக்குநர்கள் பாலா, ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் இவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து இருக்கின்றனர்.

ஐந்து முறை தேசிய விருது வென்றவரான பாலு மகேந்திரா, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவி கே. சந்திரன், கே.வி.ஆனந்த் போன்றோருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க பட முடியாத பாலு மகேந்திராவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media